வி.எஸ்.பாபு: கந்துவட்டி, அராஜகம் – வைரலாகும் ட்வீட்
- May 5, 2026
- 0
வி.எஸ்.பாபுவின் கந்துவட்டி, மிரட்டல் போக்குகள் குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் ட்வீட்
சென்னை கொளத்தூர் தொகுதியில் டிவிகே வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள ட்வீட் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைரலாகி வருகிறது.
X தளத்தில் “வி.எஸ்.பாபுவால் பாதிக்கப்பட்டவர்” எனத் தன்னை அடையாளப்படுத்தும் ஒருவரின் பதிவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், அவரின் கடந்த கால செயல்பாடுகள் தற்போதைய வெற்றிக்கு பின் அச்சம் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்த வேட்பாளர் என்பதால் வி.எஸ்.பாபு உயர்ந்த பொறுப்பு ஏதேனும் பெறுவார் என்றும், அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்களிடையே அச்சம் இருப்பதாக குறிப்பிட்டு, ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
பதிவில், அதிக வட்டிக்கு கடன் வழங்கி பல தொழில் முனைவோர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வட்டி மீது வட்டி சேர்த்து வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடன் வசூலில் மிரட்டல், கடைகளை அராஜகமாக மூடுதல், தினசரி மிரட்டலான வசூல் குழுக்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொளத்தூர் தொகுதியில் இவரால் பலர் தொழிலை இழந்துள்ளதாகவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் விசாரணை கோர, மற்றவர்கள் அரசியல் நோக்கம் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வி.எஸ்.பாபு அல்லது டிவிகே தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் இல்லை.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதிப்படுத்தி மட்டுமே நம்ப வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகும் வரை கவனத்துடன் அணுக வேண்டும். இது தொடர்பாக விளக்கம் கேட்டு வி. எஸ். பாபு அவர்களைத் தொடர்பு கொண்டோம். இதுவரை இணையவில்லை. தகவல்கள் வந்ததும் அதனை இங்கே பதிவு செய்வோம்.