இந்தியா

CSK: பணம் இருந்தும் ஏலத்தில் தவறியதே காரணம் – கொந்தளிக்கும் ரெய்னா

  • April 21, 2025
  • 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய மோசமான ஆட்டத்திற்கு காரணம் குறித்து அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ரெய்னா கூறுகையில், “கைகளில் நிறைய பணம் இருந்தும் ரிஷி பந்த், ஷ்ரேயாஸ்,

CSK: பணம் இருந்தும் ஏலத்தில் தவறியதே காரணம் – கொந்தளிக்கும் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய மோசமான ஆட்டத்திற்கு காரணம் குறித்து அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரெய்னா கூறுகையில், “கைகளில் நிறைய பணம் இருந்தும் ரிஷி பந்த், ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் போன்றோரை மெகா ஏலத்தில் விட்டுவிட்டனர். ஏலத்தில் பிரியன்ஸ் போன்ற ஏராளமான இளம், திறமையான வீரர்கள் இருந்தும் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இதுவே சிஎஸ்கே-வின் இந்த நிலைக்கு முக்கிய காரணம். ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே இப்படி தடுமாறியதை நான் பார்த்ததில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், அணியில் திறமையான இளம் வீரர்கள் இருந்தும், சரியான முறையில் அவர்களை பயன்படுத்தாதது அணியின் பின்னடைவுக்கு காரணம் என்றும் சாடினார். தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் அனுபவ வீரர்களை மட்டுமே நம்பியிருந்தது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது போன்ற காரணங்களாலும் அணி தோல்விகளை சந்தித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த ரெய்னா, அணியின் தற்போதைய நிலையை வெளிப்படையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.