News

கள்ளுக்கான தடையை நீக்குவது முதல்வர் கையில்தான் உள்ளது – அமைச்சர் சாமிநாதன்

  • June 17, 2025
  • 0

திருப்பூர் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில், புதி விரிவான மினிபஸ் திட்ட தொடக்க விழா, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைகள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், மனித வள மேலாண்த்துறை அமைச்சர்

கள்ளுக்கான தடையை நீக்குவது முதல்வர் கையில்தான் உள்ளது –  அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில், புதி விரிவான மினிபஸ் திட்ட தொடக்க விழா, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைகள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், மனித வள மேலாண்த்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்று 18 புதிய வழித்தடங்களுக்கான ஆணையை வழங்கினர். தொடர்ந்து புதிய வழித்தடத்திற்கான மினி பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் 86 இடங்களில் 18 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு மினிபஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக இத்திட்டம் கலைஞரால் துவக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலும் இத்திட்டம் விரிவடைந்தது. கள்ளுக்கு தடைவிதிக்க ஒரு சிலர் கோரி வந்தாலும், கள்ளுக்கான தடையை நீக்குவது முதல்வர் கையில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *