நீட் தேர்வில் தமிழக அளவில் நான்காம் இடம் உட்பட தேசிய தரவரிசைகளில் முன்னனி இடங்களை பிடித்து கோவை மாணவர்கள் சாதனை – மன அழுத்தம் இல்லாமல் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தகவல்…
அரசு,மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்.டி.ஏ.சார்பாக நீட் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் தேசிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,
கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் தேசிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் தர வரிசையில் முன்னிலை பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்..
அதன் படி கோவை மண்டலத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்களான கார்த்திக் விஜயராஜா தேசிய அளவில் 63 வது இடத்தையும் மாநில அளவில் நான்காம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்…
இந்நிலையில் இதே போல கோவை மண்டல அளவில் நீட் தேர்வில் சாதித்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது..
இதில் கோவையை சேர்ந்த வயதான தம்பதியினர் தங்களது பேரன் மருத்துவர் படிக்க செல்வதை அறிந்து மேடையிலேயே கட்டி அணைத்து முத்தமிட்டனர்.இது காண்பவர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது..
இதே போல ஒவ்வொரு பெற்றோர்களும் மேடையில் ஏறி தங்களது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் இணைந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை மண்டல அளவில் சுமார் 48 மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது..