நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளி தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் ஒப்படைத்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெல்லையப்பர் கோவிலில் செய்யப்பட்டுள்ளோம் வெள்ளி தெருக்கு பக்தர்களால் 175 கிலோவிற்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது நானும் ஒரு கிலோ வெள்ளி கொடுத்துள்ளேன்.
2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நெல்லையப்பர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின்னர் நான் அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் கோவிலுக்கு திருப்பணி செய்ய அனுமதி பெற்று மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும்.அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைைய வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் பிரச்சனைக்கு பின்னணியில் பாஜக இல்லை. பாஜக அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.
சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அது போலவே தங்க நகை காண பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டதும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். என் ஆர் சி என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என தெரிவித்தார்