தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்..
புதுச்சேரியில் ஆண்டு கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக இந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றியதிற்கு ரங்கசாமியும் ஒரு காரணம் என்று குறிப்பிட்ட அன்பழகன் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி திமுகவின் கிளை கழகம் போல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சிக்கு ரங்கசாமி வந்தால் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் துரோகிகளை ஒருபோது மன்னிக்க மாட்டோம் என்றும் நாராயணசாமி கூறுகிறார், ஆனால் கட்சி தலைமை கூறினால் அதை ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் தெரிவிக்கிறார்,இதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
தேர்தல் நேரத்தில் இதுபோன்று கட்சித் தலைவர்களின் மேல் அவதூரை பரப்பி தலைவர்களை இழிவு படுத்தி பேசுவதை நாராயணசாமி வழக்கமாக கொண்டுள்ளார் இதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டப் போகிறோம் என்பது வெறும் காட்சி பொருளாகவே மாறி உள்ளது, சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய அவர் சபாநாயகர் அறிவிப்புகளை தொடர்ந்து ரங்கசாமி பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்து வருகிறார், எனவே இதில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு புதிய சட்டமன்றம் கட்டுகிறோமா இல்லையா என்பதனை விளக்க வேண்டும் என்றார்.