பிள்ளை போல் வளர்த்த வளர்ப்பு நாய் உடல் நலக்குறைவால் இறந்ததும், வருந்துகிறோம் Rest in peace என்று ப்ளக்ஸ் வைத்து, தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி இறந்த 7 வயது பிரவுனி எனும் பெண் டாபர்மேன் நாயை மனித உடல்களை போல் ஐஸ் பாக்ஸ்சில் வைத்து குடும்ப உறவினர்கள் வந்ததும் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்த தம்பதியர்
தஞ்சை ரஹ்மான் நகரை சேர்ந்த ஃபெர்ணான்டோ – பிச்சையம்மாள் தம்பதியர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், இவர்கள் பிரவுனி என்கிற பெண் டாபர்மேன் நாயை கடந்த 7 வருடமாக மிகவும் பாசமாக வளர்த்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் இறந்த நாயை ஐஸ் பாக்ஸில் வைத்து பிரர்த்தனை செய்தபின், கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்தனர், இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது