News

ராஜ்ய சபா தேர்தல்… காத்து கிடக்கும் கூட்டணி கட்சிகள்..!

  • May 26, 2025
  • 0

தமிழ்நாட்டில் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், வில்சன், எம்.எம் அப்துல்லா, ம.தி.மு.க.,வின் வைகோ, அ.தி.மு.கவின் சந்திரசேகரன், பா.ம.கவின் அன்புமணி ஆகிய ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இந்த பதவிக்கான் தேர்தல் இவ்வருடம் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா

ராஜ்ய சபா தேர்தல்… காத்து கிடக்கும் கூட்டணி கட்சிகள்..!

தமிழ்நாட்டில் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், வில்சன், எம்.எம் அப்துல்லா, ம.தி.மு.க.,வின் வைகோ, அ.தி.மு.கவின் சந்திரசேகரன், பா.ம.கவின் அன்புமணி ஆகிய ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது.

இந்த பதவிக்கான் தேர்தல் இவ்வருடம் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய சட்டசபை தொகுதிகளின் நிலவரத்தை பொறுத்து தி.மு.க. கூட்டணிக்கு 4 ராஜ்ய சபா இடங்களும், அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., கூட்டணி பொறுத்தவரை, மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் கமலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது எம்.பி.,யாக இருக்கும் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்சனுக்கு மட்டும் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மற்ற இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

அ.தி.மு.க. கடந்த லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரமும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு மீண்டும் பா.ம.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க முயற்சி செய்திறது. கூட்டணியில் சேருவதற்கான ஆரம்ப புள்ளியாக, ராஜ்யசபா சீட்டை பா.ம.க., கேட்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.,வில் இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு, எந்த பதவியிலும் இல்லாத மூத்த நிர்வாகிகள் பலர் முயற்சித்து வருகின்றனர். வரும் நாட்களில் இரண்டு பிரதான கூட்டணிகளிலும், ராஜ்யசபா சீட் தொடர்பான விவாவதம் கூடிய சீக்கிரம் தொடங்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *