News அரசியல்

ஆடிட்டர் குருமூர்த்தி புது புரோக்கர் – திராவிட கழக தலைவர் வீரமணி

  • June 7, 2025
  • 0

முன்னொரு காலத்தில் அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் இருந்தார் அந்த புரோக்கருக்கு என்ன வேலை என்றால் சம்மன் இல்லாமலேயே அவர் ஆஜராகவர். தற்பொழுது சம்மன் வாங்கிக் கொண்டு ஒரு புது புரோக்கர் கிளம்பி இருக்கிறார் அவர்தான் ஒரு ஆடிட்டர்.

ஆடிட்டர் குருமூர்த்தி புது புரோக்கர் – திராவிட கழக தலைவர் வீரமணி

முன்னொரு காலத்தில் அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் இருந்தார் அந்த புரோக்கருக்கு என்ன வேலை என்றால் சம்மன் இல்லாமலேயே அவர் ஆஜராகவர். தற்பொழுது சம்மன் வாங்கிக் கொண்டு ஒரு புது புரோக்கர் கிளம்பி இருக்கிறார் அவர்தான் ஒரு ஆடிட்டர். பாமக நிறுவன ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்த கேள்விக்கு திருவாரூரில் திராவிட கழக தலைவர் வீரமணி பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு குறித்த கேள்விக்கு…

வருமுன் காத்தல் என்பது ஒரு அரசிற்கு மிக முக்கியமான ஒன்று. அதுபோல இன்று ஸ்டாலின் தலைமையில் இருக்கக்கூடிய திமுக இதனை முன்னதாகவே உணர்ந்து சில மாதங்களுக்கு முன்னதாகவே தொகுதி குறைப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இதனை எதிர்த்தார். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை அதை சிறப்பாக செய்ததற்கு தண்டிக்கக் கூடாது. தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆட்சிகள் சிறப்பாக செய்த சாதனைக்கு பதிலாக வேதனையை உண்டாக்குகிறார்கள் மத்திய அரசு. இந்த விவகாரத்தில் தெளிவான உறுதி மொழியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பாஜகவுடன் தங்கள் கட்சியை அடகு வைத்தவர்கள் எல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் அவர்கள் கூட இது குறித்து வாயை திறக்காமல் இருக்கிறார்கள் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார்கள் அப்பொழுது எதனை பார்ப்பது முழுக்க முழுக்க தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இதனை கைவிட வேண்டும் தமிழகத்தில் மக்கள் எழுச்சியாக இதனை நடத்த வேண்டும். மாநில அதிகாரங்களை ஒடுக்குவதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் இருப்பதற்காக இந்த செயல்பாடு உள்ளது.

தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது குறித்த கேள்விக்கு…

இந்தியாவிலேயே கல்வியில் நூற்றுக்கு நூறு சாதனை படைத்தது தமிழ்நாடு இதனைக் கண்டு அவர்களால் பொறுக்க முடியவில்லை ஆகவே இதனை நாசப்படுத்துவதற்காக சமஸ்கிருதம் இந்தி ஆகியவற்றை திணிப்பதற்காக மும்மொழித்திட்டம் என்கிறார்கள் இதனை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு கூறுவதால் மத்திய அரசு நிதியை கொடுக்க மறுக்கிறார்கள் மேலும் மும்மொழி திட்டத்தை ஒப்புக்கொண்டால் தான் பணம் கொடுப்போம் என மத்திய அரசு சொல்வது கமிஷன் ஏஜென்ட் வேலையா இது பேரம் அரசியலா சட்டப்படி மத்திய அரசு கொடுக்க வேண்டும் திமுக ஆட்சிக்கு நிதி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு செய்யக்கூடிய சூழ்ச்சி தான் இது.

பாமக உட்கட்சி விவகாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு..

முன்னொரு காலத்தில் அரசியல் ரீதியாக ஒரு புரோக்கர் இருந்தார் அந்த புரோக்கருக்கு என்ன வேலை என்றால் சம்மன் இல்லாமலேயே அவர் ஆஜராகவர். தற்பொழுது சம்மன் வாங்கிக் கொண்டு ஒரு புது புரோக்கர் கிளம்பி இருக்கிறார் அவர்தான் ஒரு ஆடிட்டர். கல்யாண புரோக்கர்கள் போல் அரசியல் புரோக்கர்கள் அதிகரித்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *