News இந்தியா

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் பயங்கர தீ விபத்து

  • July 22, 2024
  • 0

இந்திய கப்பற்படையை சேர்ந்த பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளமளவென பரவி தீயால் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. தற்போது கப்பலின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது எனவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய

இந்திய கப்பற்படையை சேர்ந்த பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளமளவென பரவி தீயால் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. தற்போது கப்பலின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது எனவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய கப்பற்படையில் உள்ள போர் கப்பல்களில் முதன்மையானது ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. இது நடுக்கடலில் இருந்து குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசி தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை முழுவதும் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது கப்பலின் ஒருபகுதி முழுவதையும் பெரிதும் சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் அப்படியே ஒருபுறமாக சாய்ந்து காணப்படுகிறது. இதை நேர்க்கோட்டில் கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிபத்து சம்பவத்தை அடுத்து ஒரு இளம் மாலுமி மாயமாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பல் தீவிபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.