News அரசியல்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

  • July 21, 2024
  • 0

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது அருகில் இருந்த மாடியில் இருந்து 20 வயது இளைஞர் ட்ரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

ட்ரம்பின் தலைக்கு அந்த இளைஞர் குறி வைத்தார். ஆனால் துப்பாக்கி குண்டு ட்ரம்பின் வலது காதின் மேற்பகுதியில் பாய்ந்தது. இதில் பலத்த காயமமடைந்த ட்ரம்ப், ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து ட்ரம்புக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் மருத்துவர் ரோனி ஜாக்சன், ட்ரம்பின் துப்பாக்கிச்சூடு குறித்து அதிர்ச்சிக தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் வெள்ளை மாளிகை மருத்துவரும் தற்போதைய டெக்சாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ரோனி ஜாக்சன், தெரிவித்திருப்பதாவது, “துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ட்ரம்பின் தலையில் பாய்வதற்கு கால் இன்ச்க்கும் குறைவாக வலது காதின் மேல் பகுதியில் பாய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மரணத்திற்கு மிக நெருக்கத்தில் இருந்து ட்ரம்ப் தப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு உடனடியாக நியூ ஜெர்சிக்கு சென்றதாகவும் , அன்றிலிருந்து டிரம்பின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பில் இருந்து வருவதாகவும் ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்ரம்பின் காதில் கட்டு போடப்பட்டிருப்பது சிறிய அளவிலான ரத்தக்கசிவை நிறுத்துவதற்காக என்றும், காயம் இயற்கையாகவே குணமாகும் என்றும் ஜாக்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.