இப்படியும் நடக்குமா என்று நாம் வியக்கும் முன்னர், அதைவிடவும் கூடுதலாக நடக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டிய தேர்தல், 2026சட்டமன்றத் தேர்தல். அதிலும், தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்லும் முன்பாகவே, பதவியை ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில்
இப்படியும் நடக்குமா என்று நாம் வியக்கும் முன்னர், அதைவிடவும் கூடுதலாக நடக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டிய தேர்தல், 2026சட்டமன்றத் தேர்தல்.
அதிலும், தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்லும் முன்பாகவே, பதவியை ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் சேர்ந்த ஒருவர் மீண்டும் அதே தொகுதியில் உடனே போட்டியிடுவதெல்லாம் உச்ச துச்சம். அந்த வகையில், மொத்த மாநிலமும் இன்று பேசிக்கொண்டிருக்கும் பெயர் – மரகதம் குமரவேல்.
உள்ளாட்சிப் பொறுப்பில் தொடங்கி, நாடாளுமன்றத்தின் இளம் முகமாக ஜொலித்து, அம்மாவின் பிரியமான சட்டமன்ற உறூப்பினராகி, பின் அதிமுக மகளிரணியின் முகமாக விளங்கி, இன்று தமிழக வெற்றி கழகத்தின் மதுராந்தகத் தூணாக மாறியுள்ளார் மரகதம் குமரவேல் யார்? .
அதிமுகவின் முக்கியமான பெண் முகமாக விளங்கிய இவர், தற்போது “தமிழக வெற்றி கழக” ஆட்சியில் ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். உள்ளாட்சிப் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அவர் கடந்து வந்த பாதை என்ன? வாருங்கள் பார்ப்போம்!
மரகதம் குமரவேல் அவர்கள் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்னையின் மடிப்பாக்கத்தில் பிறந்தார். இவரது தந்தை திரு. சண்முகம், தாய் திருமதி. பேபி ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (TNOU) இளங்கலை வணிகவியல் (B.Com) பட்டம் பெற்றார்.
2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தையூர் எஸ். குமாரவேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயவர்த்தினி என்ற ஒரு மகள் உள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும், விவசாயியாகவும் விளங்குகிறார்.
மரகதம் குமரவேல் அவர்களின் குடும்பம் நீண்ட காலமாகவே அரசியல் பின்னணியைக் கொண்டது. இவரது தாய் தையூர் பஞ்சாயத்தின் உறுப்பினராக இருந்தவர். இவரது கணவர் குமாரவேல் தையூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றியவர். இந்த வலுவான குடும்பப் பின்னணியுடன், மரகதம் குமரவேல் அவர்கள் அதிமுகவின் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
இவரது முதல் பெரிய அரசியல் பதவி, திருப்போரூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் (Chairman of Thiruporur Panchayat Union) ஆகும். உள்ளாட்சி அமைப்பில் அடிமட்டத் தொண்டராகப் பணியாற்றி, மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து கொண்டதே இவரது பிற்கால அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
2014-ஆம் ஆண்டு இவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. 16-வது மக்களவைத் தேர்தலில், காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இவருக்கு வாய்ப்பளித்தார். அப்போது இவருக்கு வயது வெறும் 31 மட்டுமே!
இந்தத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை 1.47 லட்சம் (துல்லியமாக 1,46,866) வாக்குகள். தனது 31-வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்! டெல்லிக்கு முதன்முதலில் சென்ற அந்த இளம் வயதிலேயே, நாடாளுமன்றத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.
காஞ்சிபுரம் நெசவாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுவது மற்றும் காஞ்சிபுரத்தை சென்னை புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் வட்ட ரயில் சேவை போன்ற முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற இவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
குரல் (VO): 2019 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டுப் பின்னடைவைச் சந்தித்தாலும், இவரது மக்கள் பணி தொய்வடையவில்லை. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கி, 86,646 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக (MLA) முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன், அதிமுகவில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர், கழகச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் போன்ற மிக முக்கியப் பொறுப்புகளையும் இவர் வகித்தார்.
தொடர்ந்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர்களுடன் கடும் மும்முனைப் போட்டி நிலவியது. இறுதியாக 69,284 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலையை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் தனது மதுராந்தகம் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார் மரகதம் குமரவேல்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே, தமிழக அரசியலை உலுக்கிய ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது. மே 25, 2026 அன்று, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான “தமிழக வெற்றி கழகத்தில்” இணைந்தனர்!
இவர்களின் இந்த அதிரடி முடிவு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இத்தகைய “குதிரை பேரங்களில்” ஈடுபட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மரகதம் குமரவேல் அவர்களின் மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ராஜினாமாவின் விளைவாக, தற்போது 2026 அக்டோபர் 6 அன்று மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசாங்கத்தின் மூன்று மாத கால ஆட்சிக்கு ஒரு முக்கிய அக்னிப்பரிட்சையாக இந்த இடைத்தேர்தல் அமையப் போகிறது. மரகதம் குமரவேல் தவெக சார்பில் மீண்டும் இங்கு களம் இறங்குவார் என்று அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.
உள்ளாட்சிப் பொறுப்பில் தொடங்கி, நாடாளுமன்றத்தின் இளம் முகமாக ஜொலித்து, தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஒரு முக்கியத் தூணாக மாறியுள்ளார் மரகதம் குமரவேல். அவரது இந்த புதிய அரசியல் பயணம் அவருக்கு எத்தகைய வெற்றிகளைத் தரப்போகிறது? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? காலம்தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்!