News இந்தியா

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

  • August 14, 2024
  • 0

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றி வைக்கிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. மக்கள் உற்சாகத்துடன் கொடியைக் கைகளில் ஏந்தி பெருமிதத்துடன் உள்ளனர். மற்ற பண்டிகைகளைப் போல சுதந்திர தினம், குடியரசுத் தினத்தை நாம் பண்டிகையாக கொண்டாடுகிறோம்

உலக அமைதி மற்றும் செழுமையை விரிவுபடுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்துகிறது. பெண்களை மையமாக வைத்து பல்வேறு சிறப்பு அரசு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயிகள், எதிர்பார்ப்புக்களை விடச் சிறப்பாக விளை பொருட்களை விளைவித்துள்ளனர். இதன்மூலம் விவசாயத் துறையிலே இந்தியாவை சுயசார்பு உடையவர்களாக மாற்றியுள்ளனர்.

இப்போது விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா, இதுவரை காணாத முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது .விளையாட்டு துறையிலும் கூட,கடந்த பத்தாண்டுகளில் அதிக முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. தற்போது நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், இந்தியா தனது மிகச்சிறப்பான முயற்சியை மேற்கொண்டது” என்றும் தெரிவித்தார்.