News உலகம்

டிரம்ப் தலையிட்டதால் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதா..?

  • May 21, 2025
  • 0

டிரம்ப் தலையிட்டதால் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதா என மோடி தெரிவிக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் உடனான பிரச்சனைகளை இருவரும் பேசித் தீர்ப்போம் என்பதுதான் சிம்லா ஒப்பந்தம் தெரிவிக்கிறது. கேஎம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

டிரம்ப் தலையிட்டதால் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதா..?

டிரம்ப் தலையிட்டதால் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதா என மோடி தெரிவிக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் உடனான பிரச்சனைகளை இருவரும் பேசித் தீர்ப்போம் என்பதுதான் சிம்லா ஒப்பந்தம் தெரிவிக்கிறது. கேஎம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி பகுதியில் 60.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 672 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உச்சம்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் விளக்கேற்றி செய்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் அடுத்த இரண்டு மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இதில் பயனாளியின் பங்கு 72,000, மத்திய அரசின் பங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மாநில அரசின் பங்காக 7 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் கட்டப்பட்டுள்ளது. இது மாநில அரசின் திட்டம் ஆனால் மத்திய அரசு தனது பங்கையும் அளித்துள்ளது.

வாகா எல்லையில் இன்று முதல் கொடியேற்றப்படும் என அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு:

மத்திய அரசை பொறுத்தளவில் மோடி, போர் குறித்து பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பாக மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார், பதினாறாம் தேதி அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தோம் என்று சொல்லி இருந்தார். அப்படி என்றால் நமது விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாக தகவல்கள் வருகிறது, அதற்கு ஜெய்சங்கர் உதவி செய்தாரா என கேள்வி எழுந்துள்ளது. ஒரு நாட்டின் மீது யுத்தம் செய்வதற்கு முன்பாக நாங்கள் உங்கள் மீது தாக்குதல் செய்யப் போகிறோம் என சொல்வது தேச துரோகம் ஆகும். இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக இருமுறை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை, பாராளுமன்றத்தை கூட்டினால் மோடியிடம் கேள்வியை கேட்க முடியும், ஆனால் மோடியோ இதைப் பற்றி பேச தயாராக இல்லை, அதைப்போலவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு இந்த போர் நிறுத்தத்தை கொண்டு வந்திருப்பதாக நான்கு முறை சொல்லி இருக்கிறார். டிரம்ப் தலையிட்டதால் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதா என மோடி தெரிவிக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் உடனான பிரச்சனைகளை இருவரும் பேசித் தீர்ப்போம் என்பதுதான் சிம்லா ஒப்பந்தம் தெரிவிக்கிறது. மூன்றாவதாக ஒருவரை தலையிட மாட்டோம் என்பது இந்தியாவின் கொள்கையாக ஏறக்குறைய 55 ஆண்டுகளாக உள்ளது இதை சரித்து விட்டாரா மோடி.

ராகுல் காந்தியின் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு:

விமானங்கள் தாக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினோம் முதலில் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி தாக்கப்பட்டால் நம்முடைய விமானங்கள் தாக்கப் போகிறது என்கிற தகவலை சொன்னது ஜெய்சங்கர் அவர்கள், அவர் யார் சொல்லி செய்தார். இந்த கேள்விகளுக்கெல்லாம் மிகப்பெரிய மர்மங்கள் உள்ளது. எந்த மர்மத்தையும் சொல்லாமல் வெள்ளை துணியை போற்று மூடுவதைப் போல் இவர்கள் செய்வது இந்தியாவிற்கு செய்கின்ற துரோகம். பாராளுமன்றத்தை இப்போது கூட்டவில்லை என்றாலும் ஜூலை 14ஆம் தேதி மழை கால கூட்டத்தொடர் தொடங்கியாக வேண்டும் அப்போது கேள்வி கேட்போம். எங்களைப் பொறுத்தளவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர் கட்சிகள் ஒற்றுமையோடு இருந்து பெஹல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதன் பிறகு நமது தாக்குதலுக்குப் பிறகு அந்த வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்தோம். இந்திய ராணுவமும் விமானப்படையும் செய்திருக்கும் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறோம் ஆனால் அரசு எந்த தவறுகளை மறைக்கக் கூடாது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *