News அரசியல் தமிழ்நாடு

டெல்லி சென்ற முதலமைச்சர் நிதியை பெற்று வருவாரா ? – பிரேமலதா

  • May 22, 2025
  • 0

ஜனவரி 9 ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு. மாநாட்டில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என தெளிவாக அறிவிப்போம். டெல்லி சென்ற முதலமைச்சர் நிதியை பெற்று வருவாரா ? அல்லது தனது சுய லாபத்திற்கா

டெல்லி சென்ற முதலமைச்சர் நிதியை பெற்று வருவாரா ? – பிரேமலதா

ஜனவரி 9 ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு. மாநாட்டில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என தெளிவாக அறிவிப்போம்.

டெல்லி சென்ற முதலமைச்சர் நிதியை பெற்று வருவாரா ? அல்லது தனது சுய லாபத்திற்கா சென்றாரா என பார்ப்போம்

நாமக்கல்லில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பரபரப்பு பேட்டி.

நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக நாமக்கல்லில் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும் போது…

தேமுதிக கட்சியின் வளர்ச்சி குறித்து ஒவ்வொரு மாவட்டம் முழுவதும் பேசி வருகின்றோம், கூட்டணியை பொருத்த வரை, ஜனவரி 9 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தெளிவாக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என அறிவிப்போம் மேலும் தானும், விஜய பிரபாகரனும் 234 தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமித்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலை நிச்சயம் மாற வேண்டும்.

இதற்கெல்லாம் மது, கஞ்சா தான் காரணம். பெண்களுக்கான குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கும் போது தான் நிலமை மாறும், அரக்கோணத்தில் இளம் பாலியல் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டவருக்கு ஜாமினில் வழங்கினாலும் தப்பு செய்தவருக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

நிதி பெறவே டெல்லிக்கு முதலமைச்சர் சென்றதாக தெரிகிறது. முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திற்கு உண்டான நிதியை பெற்று வருகிறாரா அல்லது தன்னுடைய சுய லாபத்திற்காகவா ?, கட்சியின் லாபத்திற்காகவா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கதுறையினர் சென்னை முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆகாஷ் பாஸ்கர் என்பவருக்கு சம்மம் அனுப்ப பட்டுள்ளது.

சினிமா படத்தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்தது தொடர்பாக அந்தந்த நடிகர்களுக்கு சம்மம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பணத்தை ஏமாற்றுபவர்கள் தண்டணை பெற்றே ஆக வேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *