தமிழக எதிர்கட்சி துணை தலைவரும், மேனாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார், கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பேட்டி.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வீட்டிற்கான முதல்வர், வீட்டு மக்களுக்கான முதல்வர் எனவே அவர் வீட்டிற்கு போவது உறுதி என்றும், நாட்டிற்கான முதல்வர், நாட்டு மக்களுக்கான முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தான் என்றும் 2026ல் அவர் கோட்டைக்கு போவது உறுதி என்றும் நம்பிக்கை பேட்டியளித்த ஆர் பி உதயகுமார். 2011ல் எப்படி திமுக ஆட்சி வீட்டிற்கு போக மின் வெட்டு காரணமாக இருந்ததோ, அதுபோலவே 2026ல் அந்த வரலாறு திரும்பி, திமுக வீட்டிற்கு போக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரிப்பும், நாள் தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளும் அமையும் என்றும் காட்டம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, பிறந்தநாளை முன்னிட்டும், 2026ல் அவரது தலைமையில் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமையவும், அதிமுக அம்மா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் நூறு திருக்கோயில்களில் சிறப்ப வழிபாடு நடைபெறுகிறது அதன் ஒருபகுதியாக அறுபடை முருகன் கோயில்களிலும் இத்தகைய வழிபாடு நடைபெறுகிறது அதில் நேற்று திருச்செந்தூரில் பங்கேற்ற மேனாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இன்று, தஞ்சையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு,
கும்பகோணம் அருகேயுள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் எடப்பாடி கே பழனிச்சாமிக்காகவும், மீண்டும் 2026ல் அம்மா ஆட்சி அவரது தலைமையில் அமையவும் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார் அவருடன் அதிமுக நிர்வாகிகளான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஏவிகே அசோக்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட அவை தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் பாபநாசம் அய்யப்பன், கும்பகோணம் சோழபுரம் க அறிவழகன் உட்பட பலர் அவருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அங்கிருந்து புறப்படும் முன், திருக்கோயில் நுழைவு வாயில் அருகே செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்கட்சி தலைவரும், மேனாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார்,
வாழ்க்கையில் பொய் பேசலாம், ஆனால் பொய்யையே வாழ்க்கையாக கொண்டவர் ஸ்டாலின் என்றும், திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக நீங்கள் மயக்கம் போடும் அளவிற்கு பச்சை பொய் பேசும் முதல்வரை நாடு இப்பதான் பார்க்கிறது அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும், நிதி ஆயோக் கூட்டங்களுக்கு செல்லாமல், ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது, தன்மானம் உள்ளவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என 4 ஆண்டுகளாக வீரவசனம் பேசிய புறக்கணித்து ஊட்டியில் லூட்டி அடித்து வந்த ஸ்டாலினுக்கு எங்கிருந்து தான் திடீர் ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை இம்முறை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார் என்றும் கிண்டலடித்த ஆர் பி உதயக்குமார் தொடர்ந்து பேசும் போது,
நான்காண்டு திமுக ஆட்சியின் அவல நிலைகளை நாட்டு மக்களுக்கு தோலுரித்து காட்டுகின்ற திண்ணை பிரச்சாரமாகவும், 2026ம் ஆண்டு அம்மா ஆட்சி தமிழகத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் 88 அதிமுக கட்சி மாவட்டங்கள் முழுவதும், தொகுதி வாரியாக, வெள்ளிக்கிழமை தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இன்று 15வது வாரமாக இது தொடர்ந்து வருகிறது இத்தகைய திண்ணை பிரச்சாரம் சுவாமிமலையிலும் நடைபெற்றது என கூறி உதயகுமார்,
டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, இதில் இப்போது கருத்து எதுவும் கூறு முடியாது என்ற போதும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு வரி வருவாய் இழப்பீடு முறைகேடு, கூடுதல் விலை முறைகேடு, டாஸ்மாக் சரக்கு போக்குவரத்து வாகன முறைகேடு, எந்த சரக்கை கொள்முதல் செய்ய வேண்டும், எந்த நிறுவனத்தின் சரக்கை கொள்முதல் செய்ய வேண்டும், எந்த சரக்கிற்கான தேவையை அதிகரிக்க வேண்டும், எந்த சரக்கை சப்ளை செய்ய வேண்டும் என பலவிதத்திலும் முறைகேடு நடந்துள்ளது இது உண்மை. இதில் தொடர்புடையவர்கள் தற்போது ஓடி ஒளிகிறார்கள்.
பதிலளிக்க வேண்டிய தமிழக முதல்வர் இது குறித்து தொடர்ந்து மவுனம் காக்கிறார், எந்த விளக்கமும் தர முன்வருவதில்லை என்பதால் இதில் சந்தேகம் வலுக்கிறது நீதி விசாரணை இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளதால், இறுதியாக எல்லா விவரமும் முழுமையாக நாட்டு மக்களுக்கு தெரியவரும் என உறுதியாக கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி நீடிக்காது என தேமுதிக கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, நீங்கள் கூறி தான் இந்த செய்தி எனக்கு தெரிய வருகிறது எனக்கு சுவாமிமலை முருகனை தான் தெரியும், வேற ஒண்ணும் தெரியாது என அப்பாவியாய் குறிப்பிட்டு அந்த கேள்வியை சமாளித்தார்.
2011ல் எப்படி திமுக ஆட்சி வீட்டிற்கு போக மின் வெட்டு காரணமாக இருந்ததோ, அதுபோலவே 2026ல் அந்த வரலாறு திரும்பி, திமுக வீட்டிற்கு போக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரிப்பும், நாள் தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளும் அமையும் என்றும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ கையாலாகாத முதல்வராகவே ஸ்டாலின் உள்ளார். அவர் நடைபெற்ற சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறாரே தவிர பிரச்சனையை தீர்க்க அக்கரை காட்டுவதில்லை என்றும், எனவே இந்த அரசு வீட்டிற்கு போகவது உறுதி என்றும், கடந்த 73 ஆண்டுகளில் தமிழகம் பெற்ற கடன் 5 லட்சம் கோடி என்றால், திமுகவின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் மட்டும் பெற்ற கடன் மட்டும் 4.5 லட்சம் கோடி என்றும் இன்னும் 1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வாங்க உள்ளார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை தந்தார். கடந்த 4 ஆண்டுகளில் திமுகவினரின் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது, திமுக கரைவேட்டி கட்டிக் கொண்டு, திமுக கொடி பறக்கும் காரில் பறப்பவர்கள் குற்றவாளிகள் என்றால் தமிழக முதல்வர் ஸ்டாலினோ அவர்கள் திமுகவினர் அல்ல, திமுக அனுதாபிகள் என சட்டமன்றத்திலேயே நியாயப்படுத்துகிறார்.
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவரது கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது. காவல்துறையினருக்கு பெண்ணிற்கு கற்பு பறிபோன பிறகு நடவடிக்கை எடுப்பது தங்கள் கடமையா அல்லது கற்பு பறிபோகாமல் தடுத்து அவர்களை காப்பது தங்கள் கடமையாக என தமிழக காவல்துறையினருக்கே சந்தேகம் எழுகின்ற வகையில் முதல்வர் செயல்படுகிறார் என குற்றம்சாட்டியதுடன், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வீட்டிற்கான முதல்வர், வீட்டு மக்களுக்கான முதல்வர் எனவே அவர் வீட்டிற்கு போவது உறுதி என்றும், நாட்டிற்கான முதல்வர், நாட்டு மக்களுக்கான முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தான் என்றும் 2026ல் அவர் கோட்டைக்கு போவது உறுதி என்றும் நம்பிக்கையுடன் பேட்டியளித்தார் திரு. ஆர் பி உதயகுமார்.