சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வருகை புரிந்தார், முன்னதாக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் கூடுதலாக இடங்கள் வேண்டும் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் உள்ளன அனைத்து கட்சிகளையும் அரவணைக்க வேண்டும் அந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற திமுக தலைவர் எங்களோடு உரையாடலை நிகழ்த்துகிற போது சூழலை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தையின் போது முடிவெடுக்கப்படும்.
இன்று பாஜக தலைவர் செய்தியாளரிடம் கூறும் பொழுது இந்தியா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என தெரிவித்திருந்தார் சம்பந்தமாக திருமாவளவன் அவரிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தும் விதமாக பாஜக நினைக்கிறது அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது என்றும் சிதறடிக்க முடியவில்லை என்ற கவலையில் தங்களுக்கு வாய்க்கு வந்ததை பேசுவதாக தெரிவித்தார்.
தமிழ் உணர்வாளர்களை சமாதான சக்திகளாக மாற்றுவதற்காக ஆளுநர் முயற்சிக்கிறார். முருக பக்தர்கள் எல்லாம் பாஜகவின் ஆதரவாளாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த போவதாக அறிவித்திருக்கிறார்கள் முருக பக்தர்களுக்கு என்ன கோரிக்கை என்று இதுவரை தெரிவிக்கவில்லை.
இது இவர்களுக்கான கோரிக்கை அரசியல் ஆதாயம் என்பதால் மாநாட்டில் நோக்கம் தமிழ்நாட்டை ஒடிசாவை போன்று டெல்லியைப் போல மகாராஷ்டிராவை போல கருதி காய்களை நகர்த்த வேண்டாம்.
உங்கள் முயற்சி ஒருபோதும் பலிக்காது தமிழ்நாடு பண்படுத்தப்பட்ட ஒரு மண் முருக பக்தராக இருந்தாலும் அவர்கள் மதச்சற்றவர்களாக தான் இருப்பார்கள் ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமியர்களோடும் இதர மதத்தோடம் நல்ல தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் ஆதாயம் திரட்ட முடியாது என தெரிவித்தார்.