News அரசியல்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா இரண்டாவது இடம் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

  • June 9, 2025
  • 0

கடந்த 10 ஆண்டுகளில் வறுமை கோட்டுக்கு கீழே இருந்த 27 கோடி பேர் மேலே உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதமாக தெரிவித்தார் எவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்ல

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா இரண்டாவது இடம் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கடந்த 10 ஆண்டுகளில் வறுமை கோட்டுக்கு கீழே இருந்த 27 கோடி பேர் மேலே உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதமாக தெரிவித்தார்

எவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற மனசு அதிகாரிகளுக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் தேசிய இ-விதான் செயலி (நேவா) தொடக்கவிழா தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு தேசிய இ-விதான் செயலியை துவக்கி வைத்தார்.

இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, தலைமை செயலாளர் ஷரத் சவுகான் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மதிய இணை அமைச்சர் எல் முருகன்..

கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே இருந்து மேலே உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 11 வது இடத்திலிருந்த இந்திய பொருளாதாரம் தற்போது நான்காவது இடத்திற்கு வந்துள்ளது இது மிகப்பெரிய வளர்ச்சி என்று குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் அனைத்து பொருள்களையும் இறக்குமதி செய்யப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியா இருக்கும் என்று அவர் பெருமிதமாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்…

காகிதம் இல்லா சட்டப்பேரவை உருவாக்கப்பட்டிருப்பதால் ஆண்டிற்கு மூன்று முதல் ஐந்து டன் காகிதங்கள் மிச்சப்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்,இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…

தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதனை கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு மனசு இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்துச்சேரி முழுவதும் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்று அவர் குறிப்பிட்டார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *