News அரசியல்

ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட துப்பில்லாத அரசு – ஹெச். ராஜா

  • June 11, 2025
  • 0

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பல முட்டுக்கட்டைகள் நடக்கிறது. இந்து மக்கள், இந்த ஆட்சியை இதற்காகவே தூக்கி எறிவார்கள். சிதம்பரத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா

ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட துப்பில்லாத அரசு – ஹெச். ராஜா

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பல முட்டுக்கட்டைகள் நடக்கிறது. இந்து மக்கள், இந்த ஆட்சியை இதற்காகவே தூக்கி எறிவார்கள். சிதம்பரத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேட்டி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று சிதம்பரம் வந்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர்.

முன்னதாக அவர் சிதம்பரம் அம்மாபேட்டையில் பாஜகவின் கொடியை ஏற்றி வைத்து கட்சி அலுவலகத்தை ஹெச். ராஜா திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அறிவித்ததில் இருந்து திமுகவிற்கு நிலை தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கூட்டணி அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி இது சந்தர்ப்பவாத கூட்டணி என கூறினார். தமிழகத்தில் மக்களுக்கு ஞாபக சக்தி குறைவு என நினைக்கிறார்கள்.

2016ல் விழுப்புரம் சிதம்பரம் கட்சி எனப்படும் விசிக திமுகவோடு இருந்ததா? இரண்டு கம்யூனிஸ்ட்கள் திமுகவோடு இருந்தார்களா? அவர்கள் மக்கள் நல கூட்டணி என வைத்திருந்தார்கள். 2019 ல் சேர்ந்து இருக்கிறார்கள். இரு சந்தர்ப்பவாதம் இல்லையா.

யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என முடிவு செய்வதற்கு அந்த கட்சிக்கு அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்றது ஒரு தீய ஆட்சி. இந்த ஆட்சி ஒரு நாள் தொடர்வதும் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து. போதைப்பொருள் அதிக அளவில் புழக்கம் எல்லைப்புற மாநிலமான பஞ்சாபில். ஆனால் இப்போது போதைப்பொருள் அதிக புழக்கம் உள்ளது தமிழ்நாட்டில் என அனைத்து சர்வேக்களும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து குற்ற செயல்களுக்கும் போதைப் பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த திமுக அரசு மக்கள் விரோத அரசு. இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை அழிந்துவிடும். அதனால் இந்த அரசை நீக்க ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர்.

இதில் அதிக பிரசிங்கியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நீங்கள் திமுகவோடு இருப்பது கொள்கை உறவார் அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணி முழுமையாக தோற்கடிக்கப்படும் எனக் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் சீட்டு வேண்டுமென்று ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் மூன்று இலக்கத்தில் கூட கேளுங்கள். இந்தியாவில் காணாமல் போன கட்சி சித்தாந்த ரீதியாக கம்யூனிஸ்டுதான். மேற்குவங்க மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் கம்யூனிஸ்டுகள் ஒரு சீட்டு கூட வராது என கூறுகிறார்கள்.

அழிந்து கொண்டு இருக்கின்ற கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டு வேண்டும் என்ற தைரியம் வந்து இருக்கிறது. இது வெகுஜன விரோத ஆட்சி. மதுரையில் ஜூன் 22-ல் நடக்க இருக்கின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்து விரோத திமுக அரசை இதற்காகவே இந்து மக்கள் தோற்கடிப்பார்கள். நாங்கள் கூட முருக பக்தர்கள் மாநாடு நடத்தினோம் என சேகர்பாபு கூறுகிறார். திமுக என்றாலே போக்கிரிகளின் கூட்டம். இந்த தேர்தலில் திமுக முடித்து வைக்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.

அதிமுகவில் தினமும் பங்காளி சண்டைகள் நடக்கிறது என செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, அந்தப் பிரச்சனைகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என கூறினார். முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்று சொல்வதற்கு வேல்முருகன் யார்? அவர் பெயரை மாற்றிக் கொள்ளட்டும். அஜெண்டா இல்லாத தீய சக்திகள் பேசுகிறார்கள். திருமாவளவன் சரக்கு, மிடுக்கு என பேசிய பேச்சுக்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. மாநில அரசாங்கம் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட துப்பில்லாத அரசாக இருக்கிறது. இந்த அழகில் இவர் வேந்தர் ஆக வேண்டும் என்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *