மதுரை நிலையூர் கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
தமிழகத்தில் மது கடைகள் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி
போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவங்கப்பட்டுள்ளது?-நீதிபதிகள் கேள்வி
அதில் எத்தனை நபர்கள் சிகிச்சை அனுமதிக்க பட்டிருந்தனர் எனவும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி
எத்தனை நபர்கள் சிகிச்சை முடித்து வெளியே சென்றனர்? என்ற முழு விவரங்களை நிலை அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை கைத்தறி நகரை சேர்ந்த மேகலா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு. மதுரை கைத்தறி நகரில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வசித்து வருகின்றோம்.
மதுரை கீழக்குயில் குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மார்க் மதுபான கடையை மாற்றி எங்கள் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இந்த கடை திறக்கப்படக்கூடிய இடத்திற்கு மிக அருகாமையில் அரசு பள்ளி வழிபாட்டுத்தலங்கள் உள்ளது இவ்வாறு உள்ள சூழலில் மது கடை திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
இந்த கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இப்போது கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த கடை திறக்க தடை விதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இந்த பகுதியில் கடை திறக்க தடைவிதித்த நீதிபதிகள், தமிழகத்தில் போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம். மற்றும் நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.ஜீவா இந்த பகுதியில்
மதுக்கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என வாதிட்டார்
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போதை மறுவாழ்வு மையம் நடைபெறுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்பொழுது நீதிபதிகள் அரசு தரப்பில் அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை எனவும் தமிழகத்தில் மது கடைகள் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளது?
போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவங்கப்பட்டுள்ளது?
அதில் எத்தனை நபர்கள் சிகிச்சை அனுமதிக்க பட்டிருந்தனர்?
எத்தனை நபர்கள் சிகிச்சை முடித்து வெளியே சென்றனர்?
என்றமுழு விவரங்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.