தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கானொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் சுமார் 3, 700 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு சுய உதவி குழுக்களை வங்கிகளோடு இணைக்கும் திட்டம் இன்று முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4.27 லட்சம் சுய உதவி குழுக்களில் ஒரு கோடி வரை மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் 24 கிராம ஊராட்சிகள் 5902 சுய உதவி குழுக்களுக்கும் ஒரு மாநகராட்சி மூன்று நகராட்சி 17 பேரூராட்சிகளில் சுமார் நாலாயிரத்து 5198 சுய உதவி குழுக்களுக்கும் 22 லட்சம் வங்கி கடன் மூலம் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் அனைவரும் சமூக பொருளாதார நிலையை பெற வேண்டும் அதிகாரம் ஆற்றலோடு மகளிர் செயல்பட வேண்டும் வேலை வாய்ப்பு மட்டுமல்லாது பலருக்கு மகளிர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
பொத்தம் பொதுவாக 10 லட்சம் கோடி தந்தோம் 20 லட்சம் கோடி தந்ததோம் என மத்திய அரசு சொல்கிறதே தவிர எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்ல மாட்டார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ரயில்வே திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 701 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மாநில அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் பொழுது ஆரம்பித்தார்கள். அந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை எந்தவிதமான நிதியும் இதுவரை கொடுக்கவில்லை.
ஆனால் 63,000 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளதாக பாஜக பொய் சொல்கிறது. மத்திய அரசின் திட்டத்திற்கு 7000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளது மாநில அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது நீதி பணம் கடனாக பெறப்பட்டு உள்ளது. கடனை திரும்ப செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தமிழக அரசு தான் என ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏழாயிரம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 63 ஆயிரம் போடி கொடுப்பதாக சொன்னால் என்ன நியாயம் உள்ளது. மத்திய அரசு தரவேண்டிய நிதியை நான்காண்டுகளாக தரவில்லை.
கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது பொத்தாம் பொதுவாக நிதி ஒதுக்கியதாக சொல்வார்கள் ஆனால் எந்த நிதி என்பதை தெளிவாக சொல்ல மாட்டார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் இந்தியர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என செல்கிறது. இந்த நாட்டிற்கு அரசியல் அமைப்பு சட்டம் என ஒன்று உள்ளது. அதன்படி தான் வாழ வேண்டும் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசியலமைப்பு சட்டத்தை குப்பையில் தூக்கி போட்டு விட்டார்கள்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் அதனைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். எல்லோரும் கல்வி கற்கலாம் என்பதே பிரிட்டிஷ் கல்வி கொள்கை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் தான் நமது கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள் என ஆளுநர் சொல்கிறார். ஆர்எஸ்எஸ் கலாச்சாரம் என்பது உயர் ஜாதியினர் மட்டுமே பாடம் படிக்கலாம் மற்ற ஜாதியினர் படிக்கக்கூடாது என்பது ஆகும் அந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவது தான் புதிய கல்விக் கொள்கை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்தது தமிழக மட்டும் தான்.
ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என முதலமைச்சர் சொல்கிறார். புதிய கல்விக் கொள்கை என்பது ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் சனாதன தர்மம். தமிழகம் முழுவதும் மீண்டும் தமிழக முதலமைச்சரை ஆட்சி அமைக்க வேண்டும் என அனைத்து கிராமத்தில் உள்ள பெண்களும் நினைக்கிறார்கள். 234 சட்டமன்ற தொகுதியிலும் தமிழக முதலமைச்சர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
பாஜகவுடன் தற்போது வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி வரை அவருடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி. அவர் வேறு முடிவு எடுத்து விட்டார். என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களே அதனை சொல்கிறார்கள்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை முன்னாள் வைத்துக் கொண்டுதான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்பதை அமித்ஷா சொன்னார்.எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் அழைத்து வைத்தும் அதையே தான் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவர் சுயமாக சிந்திக்க கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவிடம் ஒரு முடிவு தெளிவாக இருக்காது. எதை கேட்டாலும் டெல்லியில் முடிவு செய்வார்கள் என்று தான் சொல்லிவிடுவார்கள் என தெரிவித்தார்.