News தமிழ்நாடு

2,700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர்

  • June 20, 2025
  • 0

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கிடவு அருகே உள்ள அரசம்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் திறப்பு

2,700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர்

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கிடவு அருகே உள்ள அரசம்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர் பின்னர் செய்தியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சந்திர மோகன் அளித்த பேட்டியின் போது;

தமிழகத்தில் 2700 க்கும் மேற்பட்டவர்கள் டி ஆர்பி மூலமாக தேர்வு செய்யப்பட்டு
புதிதாக நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் பள்ளி கல்வித்துறைக்கு வந்துவிட்டது.

எந்தெந்த பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளதோ அந்த இடங்களில்
இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதத்திற்குள், ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

என்றும் தமிழகத்தில் ஓட்டுவில்லை மேற்கூரை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளை அடையாளம் காணப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றியமைக்க ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளில் நான்காயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காங்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் ஊரக பகுதிகளுக்கு ஆயிரம் கோடியும் நகர பகுதிகளுக்கு 130 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, காங்கிரீட் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *