கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்து தயாரித்த தக்லைப் திரப்படம் ஜூன் மாதம் ரிலீசானது, இந்த படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் பேசியது, சர்ச்சைக்குள்ளானது. அதில் தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம் என்று மேடையில் பேசியிருந்தார். இப்பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தக் லைப் படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை விதித்ததை எதிர்த்து, மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த்திருந்தார்.. இப்பிரச்சனைக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
- திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்.
- திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். அது உங்கள் கடமை. தியேட்டருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?
- நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.
- கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்” என கர்நாடக அரசுக்கு சுப்ரிம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.