News அரசியல்

எது எப்படி இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு – அமைச்சர் முத்துசாமி

  • May 22, 2025
  • 0

தமிழக முதலமைச்சரின் நியாயமான முன்னெடுப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்று தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் தூர் வாரும்

எது எப்படி இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு – அமைச்சர் முத்துசாமி

தமிழக முதலமைச்சரின் நியாயமான முன்னெடுப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்று தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் தூர் வாரும் பணியினை துவக்கி வைத்த தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர் வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில்,

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்றும் அது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, தமிழக முதலமைச்சர் எடுத்த முன்னெடுப்பிற்கான வெற்றி இது.

எது எப்படி இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது

அரசியலமைப்பு சட்டம் தான் எல்லோருக்கும் மேன்மையானது என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. டாஸ்மாக் துறை அதிகாரிகளை ED அதிகாரிகள் நடத்திய விதம் வருத்தத்திற்குரியது.

சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உதயநிதி குறித்தும் அவரது நண்பர்கள் குறித்தும் வெளியான கருத்துக்கள் வருத்தத்திற்குரியது. அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை.

டாஸ்மாக் நிறுவனத்தில் 24 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர் அவர்கள் அனைவரையும் முடக்கும் வகையில் ED செயல்பட்டு இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மிஷின்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
விரைவில் அனைத்து கடைகளிலும் பில்லிங் மிஷின்கள் பொருத்தப்பட்டு தவறுகள் ஏதும் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *