இந்தியா

தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

  • September 19, 2024
  • 0

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர்.

பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர், தண்டவாளத்தில் இருந்து இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தண்டவாளத்தில் வைத்து சதி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *